சனி, 31 டிசம்பர், 2022

அடுத்த எண்



நெல்லுக்கு நாற்று விட்டு 

நடவு செய்து 

அறுவடைக்கிடைப்பட்ட 

காலத்தில் 

வருடம் மாறிவிடுகிறது 


ஆனால் 

அதற்கு தேவையானது 

என்னவோ வளர்வதற்கான 

நாட்களும், நன்னீரோடு 

நம்பிக்கையான உழைப்பும்  

போதுமானது 

வருடத்தின் எண் அல்ல 


அதுபோல் 

நாம் செய்யும் 

நற்செயல்கள்தான் 

வருடங்கடந்தும் 

பேசும் 


எந்த நாளில் 

தொடங்கினோம் 

என்பதையல்ல 


ஆதலால் 

நற்செயலை தொடங்க 

எனக்காக 

காத்திருக்க வேண்டாம் 


-இப்படிக்கு 

    புத்தாண்டின் மற்றொரு எண்


வியாழன், 29 டிசம்பர், 2022

ஒரு பாடல் = ஓராயிரம் நினைவுகள்

 


காலையில் 

காதினுள் நுழைந்த 

ஒரு பாடல் 


கூண்டுக்கிளி 

சிறகடித்து பறக்க

எம்பி எம்பித் 

துடிப்பதை போல் 

மனதினில் அலைப் 

பட்டுக்கொண்டேயிருந்தது 


பின் சிறிது நேரத்தில் 

தேநீர் உதவியோடு 

தனிமை கொஞ்சம் 

கிடைக்க அப்பாடல் 

மீண்டும் துடிக்க 


அதனூடே 

மிதந்து கொண்டு 

பயணிக்கையில் 

தூர நீர்ப்பரப்பு 

சென்று 


ராகங்களை 

தூண்டிலாகயிட்டு 

நினைவுகளில் துவள 

தூரத்தில் பாடல் மட்டும் 

ஒலித்திக்கொண்டிருந்தது 


அவ்விசையோடு 

கோர்க்கப்பட்ட நினைவுகளில் 

இப்பொழுதும் 

சில கீறல்களிருக்க 


முள்ளின் முனையை 

தொட்டுணர்ந்ததுபோல் 

மேலை பட்டதும் 

மீண்டும் 

ஆழஞ்சென்றது 


மறு முறை 

வரும்போது 

ஆரத்தழுவி விடுவேன் 

யென்ற முனைப்புடன் 


அதர விளிம்பில்

சிறு புன்னகையை 

எடுத்துக் கொண்டு 

கரையை யடைந்ததும் 


நீரின் ஆழத்தில் 

யாரும் கண்டிரா 

திரியும் ஏதோவோர்  

உயிரினத்தின் 

காயங்களுக்கு 

மருந்திட்ட திருப்தி..

செவ்வாய், 27 டிசம்பர், 2022

முட்டாள்தனம்

 



பல்லாயிரம் பேரின் 

உயிரை எடுத்தோ

அல்லது  

ஊன்று கோலுக்கு 

துணையாக்கியோ 

விட்ட போர் வாளை 

இடுப்பில் வைத்துக் கொண்டு 

பூனைக்கு 

சகுனம் பார்த்த கதையாய் 



புறம் பேசி 

பலரின் வாழ்வை 

நிர்கதியாக்கியவர்களை 

நண்பர்களாய்  யெண்ணி 

முகமுன் 

கோபப்படுபவர்களை 

முதல் எதிரியாய்

பாவித்த 

முட்டாள்தனம் 

போலிருக்கிறது 


திங்கள், 26 டிசம்பர், 2022

வாழ்கை பேருந்து

 



மற்றோரின் 

விருப்பு வெறுப்புகளுக்காக 

வாழ்கைப் பேருந்தை 

வேகமாய் செலுத்தினால் 


தொலைவினில் 

ரெயில் வண்டிக்கு 

பின்னே மறையும் 

சூரியனை பார்க்க 

நேரிடலாமல் போகலாம் 


மழை தூறல்கள் 

தோலில் தரும் 

கிச்சு கிச்சுக்களை 

 உணராமல் போகலாம் 


பல்வேறு நிறுத்தங்களில் 

ஏறியிறங்கும் நபர்களும் 

அவர்களின் நினைவுகளும் 

கிடைக்காமலே 

போகலாம் 


சமயங்களில் ஆற்றனிலிறங்கி 

அசுத்தங்களை களையும் 

வாய்ப்புகள் வாய்க்காமலே 

போகலாம் 


பயணத்தில் 

எதிர்கொள்ளக்கூடிய 

பள்ள மேடுகளால் 

பாதை மாறி 

பயணப்படும்போது தோள் 

தட்டித் தேற்ற 

துணையற்றுப் போகலாம்  



இவ்வாறாக சொல்லக்கூடிய 

அல்லது 

சொல்லில் நிரம்பா

உணர மட்டுமே கூடிய 

எண்ணற்ற விசயங்களை 

இழந்து 



இலக்கை அடைந்தாலும் 

யாருமற்ற 

நிறுத்தத்தில் 

தனியாக 

நிற்க நேரிடும் 


என்பதை 

நினைவிற் கொண்டு 

மெல்ல செலுத்துக

வாழ்க்கை பேருந்தை  



சனி, 24 டிசம்பர், 2022

மலரும் மனிதமும்



 மலரும் ஓர் 

பூவைக் கண்டு 

மற்றொரு பூ 

என்றுமே 

பொறாமை 

கொள்வதேயில்லை 


மாறாக

மலரு மழகிய 

நிகழ்வைக் கண்டு 

மகிழ்ச்சியுறுமை யன்றி 


மலரா தன்னோடு 

ஒப்பிட்டு 

அந்நிகழ்வை 

கலங்கப் படுத்தாது 


தனித்துவமான 

தன்னுடைய 

மணம் விட்டு 

மலருவதற்காக  


தனக்கான நேரம் 

வரும் வரை 

பொறுமை காத்துக் 

கொண்டிருக்கிறது 


இப்படியாகத் தானிருந்திருக்க 

வேண்டும் 

மனிதமும் 

ஆனால்...


வியாழன், 22 டிசம்பர், 2022

ரசனை


 

முற்றும் கற்றவனென 

எவனுமில்லை 


ஏனெனில் 

கற்பதருக்கென்று 

ஏதாவதொன்று 

இருந்து  கொண்டே

தானிருக்கும் 


அதுபோற் என்னை 

முழுதும் ரசித்தவர் 

என்று எவருமில்லை 


ஏனெனில் 

ஏதோவொரு இடத்தில்

எங்கோவொரு மூலையில் 

நீ ரசிப்பதற்கென்றே


பார்வைகளையே 

கண்டிராத பகுதிகள் 

ஏராளமென்னில் 

 

இப்படிக்கு 

'இயற்கை' - யான

நான் 

செவ்வாய், 20 டிசம்பர், 2022

மாய மல்லி


 

கூந்தல் மல்லி 

குறுக்குவழி போக 


குறு குறு 

பார்வை பின் 

தொடர்ந்து செல்ல 


திரும்பி சிரித்த 

மல்லியால் 

சற்றே மயங்கிய 

பார்வை 


பின் தூரத்தை 

துளைத்தது


வாடை மட்டும் 

வீசும் மல்லி 

வந்த வழியில் 

காணாததையெண்ணி 


ஆந்தையாய் 

சுற்றிய பார்வை 

அமைதியிழந்து 

அலைய அந்நேரம் 


கரவொலி கேட்டு 

காடே அதிர 

பதறிய பார்வை 

பாதையை தேட 


பகலின் எதிரி 

பாம்பாய் 

காட்டை சூழ 

பாதையெல்லாம் 

நெளிந்தது 


மங்கிய பார்வை 

மரவோரம் 

பயந்து சரிய 


பார்வைக்கு 

நேராய் 

தொங்கியது 

கூந்தலும் 

மல்லியும்..


திங்கள், 19 டிசம்பர், 2022

தனிமையின் இடைவேளை



தயங்கித் தயங்கி

வாசலில் நின்று 

கொண்டிருந்தது 

அது 


கிடைத்த குறுகிய 

இடைவேளையில் 

ஒரு பெரிய அறையின் 

சிறிய மூலையில் 

நாற்காலியின் தலையின் 

மேலிருந்த தொலைபேசியின் 

வாயிலாக 


அவன் 

அழைத்த பல்வேறு 

அழைப்புகளுக்கும் 

ஒரே பதிவின் 

பல்வேறு முடிச்சுகளாய் 

அவிழ்ந்து அவ்வறையின் 

கடிகாரத்தின் 

ஓசையையும் விழுங்கியது 


சுருட்டுப் புகையை 

சிறை பிடித்தவாரே

வாசலறுகை நின்றிருந்த 

அதனை அவன் 

ஆழ்ந்து பார்த்ததில்

தானே வந்து 

தாழிட்டுக்கொண்டது 

அந்த 

'தனிமை'

 


ஞாயிறு, 18 டிசம்பர், 2022

எண்ணத்தின் முரண்


 

விரிசல் விட்ட 

கண்ணாடி குடுவையில் 

எந்த ஒரு 

துண்டை எடுத்தால் 

உடைந்து விடுமோ 

அதே துண்டு தான் 

அதனை 

உடையாமலும் 

காக்கிறது 


அதுபோல் 

எந்தவொரு யெண்ணத்தை 

வெளியே உரைத்தால் 

விரிசல் விட்ட 

வாழ்க்கை 

உடைந்து விடுமோ 

அதே எண்ணந்தான் 

அவ்வாழ்க்கையை 

அரண் போல் 

காக்கிறது !

சனி, 23 ஜூலை, 2022

உண்மை = உவமை

 


'அழகை இருக்கிறாய்'

என்ற உண்மையை 

அகம் நிறைய 

உரைத்த பின் 


அவளோ 

உன் வார்த்தைகள் 

யாவும் 

உரித்த கோழி 

போல ஒன்றும் 

இல்லாமல் 

இருக்கிறது என்றாள் 


பின் சற்றே

யோசித்து 

இவ்வாறாக 

கூறினேன் 


'தேன் எடுக்க வந்த நான் வண்டு 

திகைத்து நின்றேன் உன்னைக் கண்டு 

சீ! என்று உன் கால்கொம்பால் தீண்டு 

சிறப்பான மோட்சம் எமக்கு உண்டு'


இருக்கின்ற உண்மையை 

கூட 

இல்லாத உவமைக் 

கொண்டு கூறினாலே 

கேட்க எவருக்கும் 

விருப்பம் 


- இயற்கை 

தந்தை ஈன்ற தாய்

 


நீண்ட இரவின் 

நடு சாமத்தில் 

வந்தாலும் 

காலடி சத்தங்கேட்டு 

கண் விழிப்பாள் 


வேலையிலிருந்து 

சோர்ந்து வருகையில் 

வேடிக்கை பல 

காட்டி 

சிரிக்க வைப்பாள் 


எப்போது 

சாப்பிட்டாலும் 

எனக்குமொறு  

உருண்டை

ஊட்டி விடுவாள் 


சேர்ந்து படுக்கையில் 

சோர்ந்து போய் 

சீக்கிரம் தூங்கிடுவாள் 

எனக்கு முன் 


இடையிடையே எழுந்து 

என் இருப்பை 

உறுதிப்படுத்திக் 

கொண்டு மீண்டும் 

உறங்கிடுவாள் 

 

இப்படியாக 

பெண் பிள்ளைகள் 

வளரும் போதே 

தாயாகாவே

வளருகின்றன 

அப்பாக்களுக்கு!!


- இயற்கை 

வெள்ளி, 15 ஜூலை, 2022

பெண் பார்க்கும் படலம் - 1

 



பெண்கள் கொஞ்சுவதினாலே 

நாய்கள் குட்டிகளாகவே

இருக்கின்றன போலும் 

ஆனால் 

ஆண் வாசமடித்தால் 

மட்டும் அதிரக் 

குரைக்கும் என்றெண்ணி 

வாசல் வந்ததும் 


நேற்றிரவு வைத்த 

மருதாணிச் சாயம் 

பரந்த ஒருகையும் 

இந்த பகல் 

முழங்கை வரை சிதறிய 

கடலை மாவாகிய 

மறுகையும் ஒருசேர 

"உள்ள வாங்க"

என்று சொல்லி 

நாயை  மட்டும் 

விரட்டினார் அந்தம்மா 


"உட்காருங்க" யென்று 

சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே  

ஓரறைக்குள் சென்று 

துல்லியமாய் கேட்கா 

தொலைதூரம் மொலிக்கும்

பாடல் போல 

ஏதோ கத்திவிட்டு 

மறுபடி 

சிரித்துக் கொண்டே 

அடுக்களைக்குள் 

சென்று விட்டார் 


கரை வேட்டி 

கலைந்த மடிப்பை 

நேர்படுத்திக் கொண்டே

நிர்மலா பெரியசாமியின்

நெருங்கிய உறவினர் போல் 

கணத்தக் குரலில் 

வணக்கஞ் சொல்லி 

வரவேற்றார் அவர் 


எவ்வளவு செலவானாலும் 

பரவாயில்லை டாக்டர் 

என்பதுபோல் 

கல்யாணத்திற்குப் பிறகு 

எல்லாமே எம்பொண்ணுக்கு 

தான் என்றுரைத்து 

அவள் பேருரைத்தார் 


அண்ணன் அக்காள் 

தம்பி தங்கையற்ற 

தனி மலர் போலும் 

வீடெங்கும்

அவள் முகம்  

புகைப்படங்களாய் 

பூத்திருந்தத்து 


பெண்பார்க்க என்னோடு 

சேர்த்து பதினேழு பேர் 

அங்கு அவளையுஞ்

சேர்த்தே ஐந்துபேர் தான் 

இருப்பினும் 

பெண்ணுடன் பேச 

வேண்டுமென்று பெற்றோரைப் 

பார்க்க பெருமிதத்தோடு 

தலையாட்டினர் 


காமஞ் சொட்ட 

ஒரு குறள் 

காதல் கொட்ட 

பாரதி பாடல் 

எதை முதலில் 

சொல்லவென உள்ளிருப்பு 

போராட்டத்தில் 

கேள்விக்கணைகளை 

பெண்ணே தொடுத்தால் 

இப்படியாக 


தனிக்குடும்பம் 

எப்போ போவோம் ?


சனி, 9 ஜூலை, 2022

தந்தையின் தவிப்பு



கடைசி முத்தம் 

கணவனின் கண் 

அனுமதி கொண்டு 

பெறுவதில் இடம் 

பெயர்கிறதவள் வாழ்க்கை 


கேட்டதும் கொடுத்ததும் 

மனகனந்தாங்காது

நினைவு தப்பி 

நிற்கையில் கடந்து 

போய்க்கொண்டிருந்தவளின் 

பிம்பம் தேய்கையில் 

தேங்கி நின்றதென் வாழ்க்கை 


என் பிள்ளை 

என்றடையாளம் துறந்து

அவர் மனைவி 

என்றாகி போகையில் 

புலனது ஏதோ 

இழந்த உணர்வு 


அவள் பெயர்

நீக்க மனமன்றி 

புதுப்பிக்காமல் 

பழைய குடும்பமாக

என் பிள்ளையென்றே

இருக்கிறது  

குடும்ப அட்டை


எம்பெயரின் முதலெழுத்து 

அவள் பெயரின் முதலானதன் 

இருபத்தேழு வருட 

கர்வம் இன்றோடு 

ஒழிந்தது 


கல கலவென 

சிரிப்பால் நிறைந்த 

இவ்வீடு 

அவலகன்றதும் 

ராணியற்ற ராஜ்ஜியமாய்

கலையிழந்து 

வெறுங்கல் 

வீடாகியது 


கட்டளையிட ஆளற்ற 

சேவகனாய் 

தன்னிச்சையாய் செயல்பட 

முடியாது  தடுமாறி 

நிற்கின்றேன் 

நான் 


எப்போது 

வெளிச்சென்றாலும் 

எனக்கு போன் செய்துவிட்டு 

அம்மா எங்கே 

என்று கேட்பவள் 

இப்பொழுதெல்லாம் அவளுக்கு 

போன் செய்துவிட்டு 

அப்பா இல்லையா ?

என்பதன் எதார்த்தம் 

என்னால் ஏனோ 

ஏற்கமுடியவில்லை 


எது எங்கென்றறியா 

அவர் வீடு 

அவளதாகிய பின் 

அவளாசைப் படி 

அமையப்பெற்ற  

இவ்வீடு 

மறுவீடாகையில் 

சற்றே மருகுது 

நெஞ்சம்


விசேஷத்துக்கு மட்டும் 

வீடுவரும் சொந்தக்காரி 

போலான சொந்த 

மகளையெண்ணி 

அவளுக்கு பிடிக்குமென்று 

ஆட்டுக்கறி குழம்பு 

அம்மியில் அரைத்த 

மசாலா சேர்த்து 

செய்ததை அவளுக்கு 

பரிமாற வந்தால் 

'அவருக்கு முதல 

வைங்கப்பா' என்று 

சொல்வதவள் தவறில்லை 

அதை ஏற்கும் 

பக்குவம் தான் 

எனக்கு இன்னும் வரவில்லை


குழம்பு பட்டுவிட்டதென 

கண்ணாடி போட்ட 

கண்ணை தேய்த்துக் 

கொண்டே கண்ணீரோடு

அவள் காணும்முன்  

வெளிச்செல்கிறேன் 


எமக்கு பிறந்த 

எம்பிள்ளையாயினும் 

திருமணத்திற்கு பின் 

தத்துக் கொடுத்த 

தந்தை போல் 

உரிமையற்று ஓரமாய் 

நின்று வேடிக்கை 

மட்டுமே பார்க்கிறேன் 


அவன் நல்லவனாயிராவிட்டாலும் 

கெட்டவனாய் இருந்திரக்கூடா 

தென்பதே என் இறுதிநாள் 

வரையிறுக்கும் ஒரே

வேண்டுதல்


பிரிவென்பதோர் நாள் வரும் 

என்றுணர்ந்தே பிரியமும் 

பாசமும் வைக்கும் இத் 

தந்தையின் நிலை 

இப்பொழுது 

தற்கொலைக்கு நிகராகவல்லவா 

நிற்கிறது 

புதன், 22 ஜூன், 2022

கேள்வி ரணம் - பதில் பிணம்


பதில்களற்ற கேள்விகள் 

இரவின் இருட்டில் 

திரியும் சர்ப்பம் 

போல 

இல்லையென்றென்னி இடது 

காலூன்றினால் இருக்கென்ற 

உண்மை கொத்தும் 

இருக்கென்றென்னி வலது 

வைத்தால் இல்லையென்ற 

அச்சம் கொத்தும் 


விடையறிந்து தொடுக்கப்படும் 

வினாக்களுக்கு 

எதிர் வரும் பதில் 

எதிர் பார்த்ததில்லையெனில்

அடுத்து வரும் 

கேள்விச்  சிறுத்தை 

மனவேலி தாண்டி 

பதிலாடை பற்றிக் 

குதறும்


பரிசீலிக்கப்படாத பதில்களுக்கு

மாற்றாய் மவுனம் 

மத்தியில் வைக்கப்படும்போது 

மதங்கொண்ட அத்தினி 

பிளிறுவதை போல் 

அவர்தம் பதிலை 

நிரப்பி அதற்குமோர் 

கேள்வியை சிதறி 

செல்வர் 


கேள்விகளால் வேள்வி 

யமைத்துக்கொண்டு 

சரியென்ற பதிலையும்

ஒப்பாது 

சுட்டு தீயிட்டு 

கருக்கி 

களத்திற்கு ஒவ்வா

ஓர் வினா 

வீசிச்செல்வர்


சென்ற

விடையானது  சிலந்தி 

வலையில் சிக்கிய 

சிறு பூச்சி போல் 

வினாவினுள் சிக்கி

வெளியேற வழி 

தெரியா விக்கி 

நிற்கிறது 


இட பொருள் ஏவலற்ற 

கேள்வி விதைப்போர் 

வீரனாகிறார் 

அதுகண்டு அமைதி 

காப்போர் 

கோழையாகிறார் 


விடை யென்பதுகூட 

வினா வாகவே

விரிந்து வருகிறது 

அவர்தம் வாய்வழி

புதன், 8 ஜூன், 2022

வினைப்பயன்


மாத்திரை வாங்கி 

வரச்சொன்னால் மறந்து 

விட்டேனென்று மல்லிகை 

வியாழன், 2 ஜூன், 2022

கொலையுண்ட நாய் - குற்றவாளிகள் நாம்

கருத்த நாயின் 

பெருத்த உருவத்தின் 

பின்னங்காலிலிருந்த 

சிதைந்த புண்ணின் 

சீழிலிருந்து 

சீறும் நாற்றம் 


எவரேனும் செய்வர் 

உதவி என 

ஏங்கிய மனதுடனும் 

மங்கிய பார்வையுடனும்

முனகிக்கொண்டே 

வாலை ஆட்டிக்கொண்டு 

வாசல் வாசலாக 

தன் வம்சத்துடன் 

வந்து நின்றது 


வந்தோரெல்லாம் 

செந்தேளிதழ் கொண்டு 

வாயிற் வசை பாடிக் 

கொட்டிச் 

சென்றாரேத் தவிர 

சிறிதேனும் வலியதனை 

உணரவில்லை


அறியா பிள்ளையெனும் 

சிறிய சாத்தான்கள்

அப்புண்ணில் 

தண்ணீர் கொட்டியும் 

மண்ணள்ளி வீசியும் 

விளையாடிய போது 

குரைக்க கூட 

வலுவற்று

குனிந்து சென்றது


குழந்தைகள் திரியும் 

இத்தெருவில் 

வேகமாய் செல்லும் 

வண்டிக்காரர்களை துரத்தும் 

அப்படி துரத்தியோடிய 

யொருவன் திரும்பி 

வந்து செங்கற்க் 

கொண்டு பின்னங்காலில் 

இட்டதன் இடரிது


தோய்ந்து தோய்ந்து 

தெருவின் முதல் வந்து 

நிற்கக்கூட திராணியற்று 

நிலை தடுமாறி 

நீர்தொட்டி யருகை 

வீழ்ந்த பின் 


பின்னங்காலில் ஈக்கள் 

மொய்க்க

நாவால் நக்கி விரட்ட 

முயல முற்பட்டு 

முடியாமற் போக 

சுருண்டு படுத்த 

போது சுயநினைவு 

சூன்யமாகிக் கொண்டிருந்தது  


வலியது பொறுக்காமல் 

ஊளையிட்டதன் 

ஒளி ஊருக்குக்கேடென 

பிள்ளையார் கோவில் 

பூசாரி கூற 

ஊரின் எல்லை

கொண்டு வீசப்பட்டதேயன்றி 

உதவ வில்லை 

யொருவரும் 


இரு நாள் கழித்து 

இறந்து கிடந்த நாயின்  

மடியை கவ்வி 

இழுத்துக்  கொண்டிருந்தன  

இரு குட்டிகள் 


செவ்வாய், 31 மே, 2022

அவளில்லை


தூங்கும் விழி 

தாங்கும் முகம் 

பார்த்து தொண்டைதனை 

யடைக்கும் துக்கம் 

திக்கும் துயர 

நிலை 


கை  பொத்தி 

வாய் மூடியும் 

கண்ணீர் இமையணை 

தாண்டி கால்களில் 

பட்ட சூடுணர்ந்து 


கரங்  கொண்டு 

கண்  தோய்த்து 

அரை தூக்கம் 

கலைந்து அடுப்படி 

தேடுமுன்னிடம் 


அம்மா ?


அவளில்லை நானென்று 

எவ்வாறுரைப்பேன் 

திங்கள், 30 மே, 2022

தற்கொலை செய்து கொண்ட ஆலமரம்



காற்றோடு பேசி சிரித்துக் 

கொண்டிருந்த இலைகள் 

கட்டிடங்களுக்கு நடுவே

கேட்பாரற்று கிடந்து

மன உளைச்சளுக்களானது 


ஆற்றினருகை அரிமருகன் 

அமர்ந்து விளையாடி

அருள்  தந்தது போய் 

ரோட்டோரம் 

புகைகளையும் புழுதிகளையும் 

உண்டு புற்று நோய் 

வந்திருந்தது 


குழந்தைகள் விழுதுகளில்

தொங்கி விளையாடி 

பின் அயர்ந்தமர்ந்து

கட்டிப்பிடித்து விளையாடி 

ஆறுதல் சொல்ல கூட 

ஆளற்ற ஆலமரம் 


சொந்த பந்தங்களான 

குருவிகளின் 

கூடுகளற்ற கிளைகளால் 

அனாதையாக்கப்பட்ட 

ஆலமரம் 


சுட்ட பழம் 

சுடாத பழம் 

என்றில்லாமல் அனைத்தும் 

சிமெண்ட் தரையில் 

வீழ்ந்து நசுக்கப்பட்டு 

நன்மையற்றுப் போனதையெண்ணி 

நாளுக்கு நாள் 

மெலிந்து போனது   


வெட்டும் மின்னலைப் 

பிடித்து 

தானே 

தற்கொலை செய்து 

கொண்டது 


புதன், 18 மே, 2022

வாரா நாட்கள்

 


பள்ளி வருமுன் 

பஞ்சரானது 

புது சைக்கிள் 


வகுப்பு வாசலில் 

தடுக்கி 

விழுந்தேன் 


வந்த பின் 

முதல் பெஞ்சில் 

அமர்த்தப்பட்டேன் 


கரும்பலகை 

அழிக்க 

கட்டளையிடப்பட்டேன் 


அதீத வெயிலால் 

அன்று மதிய 

சோறும் கெட்டது 


பச்சத் தண்ணீரும் 

சூடாக 

உள்ளிறங்கியது 


பசிதூக்கத்தில் 

வீழ்ந்ததால் 

உரைநடை 

உரக்கப் படிக்க

உத்தரவிடப்பட்டேன் 


கடைசி 

பீ.டீ பீரியடும்  

கணக்கு வாத்தியருகே

கடனளிக்கப்பட்டது


இவ்வனைத்து 

துர் சம்பவங்களின் 

துயர காரணம் 


வருகைப் பதிவேட்டில் 

அவள் 

வாரா நாட்களே !


ஞாயிறு, 15 மே, 2022

இரு வார்த்தை



 ஈரிரெண்டு மணி 

நேரங் கழித்து 

ஓரிரு வார்த்தைகளை

மட்டுமே கொட்ட 

முடிந்தது 

முதல் சந்திப்பில்..


முன்னோட்டம் பார்த்த 

வார்த்தைகள் யாவும் 

தொண்டைக்குள் வெட்கி 

சிக்கியதில் வாயிற் 

வாசலில் 

வந்த முதல் 

வார்த்தை 'வாங்க'


தொண்டையினுள் சிக்கிய 

வார்த்தைகளை சுடு 

தேநீர்க் கொண்டு 

சுட்டு விட்டு


சக்தி முழுதும் 

பிரயோகித்து 

தைரிய மனைத்தும் 

கிரகித்து சொல்ல 

வந்த வேளையில் 


நீ சொன்ன 

வார்த்தையின் 

எதிரொலியில்

நான் சொன்ன 

இரண்டாம் வார்த்தை 

'போகலாம்'


சொன்ன 

இரு வார்த்தையும் 

உன்னோடு சேர்த்தால் 

என்னோடு வருவாயா ?

சனி, 14 மே, 2022

பூவும் பேதையும்



புது காலையில் 

பூத்த  மலரை 

மண்டி யிட்டு 

முகர்ந்து பேசிக் 

கொண்டிருந்த பெண் 

பிள்ளையை பின்னுக்குத் 

தள்ளி பிய்த்துத் 

தின்று பேசாமற் 

போன பெட்டை 

ஆட்டிடம் பேச்சு 

வார்த்தைக்கு போக 

பேசும் பொம்மை 

யொன்றை துணைக்கு 

கை  பிடித்து 

அழைத்துக் கொண்டு 

"இனிமே பூ 

சாப்ட்ட சாமி 

கண்ண குத்தும்னு"

அம்மா சொல்வதைப்போல

கண்டிப்பா சொல்லவும் 

அதை புரிந்தார் 

போல் மண்டையாட்டிய 

யாட்டிடம் சம்மதம் 

வாங்கின மகிழ்ச்சியில் 

பூச்செடிக்கு ஆறுதல் 

சொல்ல வந்த 

வேளையில் அப்பா 

அதே செடியில் 

மீதிப் பூக்களை 

பரித்துகொண்டிருந்ததைக்  

கண்டு புரியா 

மொழியில் பொரிந்து 

தள்ளி விட்டு 

வீட்டுக்குள் சென்று 

இறந்து போன 

பூக்களுக்காக 

அழுது கொண்டிருந்தபோது 

அம்மாவிடம் 

"சாமி அப்பா 

கண்ண குத்தாது-ல"

என்றவளை 

புரியாமல் அணைத்துக்கொண்டாள்.


வெள்ளி, 13 மே, 2022

துளிக் கறுமை

 


உதட்டோரம் கசிந்த 

சிரிப்பு நழுவி 

கன்னக் குளத்தில் 

விழுந்ததும் 


சுட்டு விரல் 

கொண்டு கண்ணடி

கறுமைத் தொட்டு 

கலந்ததில் 


பேனா முனைத் 

தொட்டெழுதிய 

எழுத்துக்களுக்கும் 

கிறுக்குப் பிடித்து 


இடமாறி இடறி 

சொல்லும் பொருளும் 

அவளதரமும் அதன் 

நகையுமாகி 

நாம சங்கீர்த்தனமாகியது 


அக்கருமை

கனந்தாங்காது  

காகிதத்துக்கும் 

மயக்கம் வந்து 

கன மேசையடியில் 

கிடத்திய 


பின் 

தரணி 

தலை 

சுற்றியது  

வியாழன், 12 மே, 2022

மஞ்சக்கயிறு


 


குயில்களின் 

கானத்தை 

கையிறாகத்

 திரித்து 


மாலையது 

மதியின் 

மஞ்சளொளில் 

தோய்த்தெடுத்து 


மழலைக் குரல் 

கொண்ட 

மங்கையவள் 

செங்கழுத்தில் 

படரவிட்டு 


காதலென்ற 

மூன்றெழுத்து 

கொண்டு 

முடிந்து 

விட வேண்டும் 

புதன், 11 மே, 2022

சொல்லாளம்

 


சொல்லின் செயல்முன் 

சொல் வந்து 

பல்பட்ட நா 

பதம் பார்த்தது 

நெஞ்சை 

திங்கள், 9 மே, 2022

நொடிப் பொருள்

 


வார்குழலது வாஞ்சையோடு

 கன்னம் தீண்டும்பொழுது

மெல்லச் சிணுங்க 

மேலுதடு சுருங்க 

விழுந்த பள்ளமதில்

 விரலது கடந்து

 செவியோரம் சேர்த்து

 மறைத்த பின் 

நொடியது பாதியில்

இடப்புறம் நோக்கி 

வலக்கண் ஏதும் 

வாள் சுழற்றுதோ 

என்றாய்ந்து நுகர்வோர் 

யாருமில்லா என்றுணர்ந்து

கண்ணோரம் சிறு 

கவிதைபாடி 

கடந்து சென்றதும் 

எம்மனக்கண்

 கண்ட இவ்விளக்கத்திற்கு 

அப்பொருள் தானே ?

பண மரம்



வேகம் 

நிறைந்த 

வயதில் 

ஞாயிறு, 8 மே, 2022

வியாழன், 5 மே, 2022

பிள்ளைக் கனா



 வர்ணங்களை

பிழிந்து 

சாறெடுத்து

அதில் 

மழலைக் கட்டளை

 

காலையில் கதிரவனைப் பார்த்து 
கண்டித்து கொண்டிருந்தாள்..

ஏன் என்று கேட்டேன் ?

செவ்வாய், 3 மே, 2022

குளிர்க் கூந்தல்

 


குளித்த 

கூந்தல் 

குளிருக்கு 

நடுங்கிற்று 

வேகங் 

கொண்ட 

விசிறியால் ...