செவ்வாய், 27 டிசம்பர், 2022

முட்டாள்தனம்

 



பல்லாயிரம் பேரின் 

உயிரை எடுத்தோ

அல்லது  

ஊன்று கோலுக்கு 

துணையாக்கியோ 

விட்ட போர் வாளை 

இடுப்பில் வைத்துக் கொண்டு 

பூனைக்கு 

சகுனம் பார்த்த கதையாய் 



புறம் பேசி 

பலரின் வாழ்வை 

நிர்கதியாக்கியவர்களை 

நண்பர்களாய்  யெண்ணி 

முகமுன் 

கோபப்படுபவர்களை 

முதல் எதிரியாய்

பாவித்த 

முட்டாள்தனம் 

போலிருக்கிறது 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக