பல்லாயிரம் பேரின்
உயிரை எடுத்தோ
அல்லது
ஊன்று கோலுக்கு
துணையாக்கியோ
விட்ட போர் வாளை
இடுப்பில் வைத்துக் கொண்டு
பூனைக்கு
சகுனம் பார்த்த கதையாய்
புறம் பேசி
பலரின் வாழ்வை
நிர்கதியாக்கியவர்களை
நண்பர்களாய் யெண்ணி
முகமுன்
கோபப்படுபவர்களை
முதல் எதிரியாய்
பாவித்த
முட்டாள்தனம்
போலிருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக