ஞாயிறு, 18 டிசம்பர், 2022

எண்ணத்தின் முரண்


 

விரிசல் விட்ட 

கண்ணாடி குடுவையில் 

எந்த ஒரு 

துண்டை எடுத்தால் 

உடைந்து விடுமோ 

அதே துண்டு தான் 

அதனை 

உடையாமலும் 

காக்கிறது 


அதுபோல் 

எந்தவொரு யெண்ணத்தை 

வெளியே உரைத்தால் 

விரிசல் விட்ட 

வாழ்க்கை 

உடைந்து விடுமோ 

அதே எண்ணந்தான் 

அவ்வாழ்க்கையை 

அரண் போல் 

காக்கிறது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக