சனி, 6 செப்டம்பர், 2025

தார் தகனம்

 வாகனங்களுக்கு வளைந்து 

கொடுக்கும் சாலையில் 


வரவேற்க வழியெங்கும் 

மரமில்லையென்று 

மனமுடைந்த 

பறவையொன்று 


மின்கம்பி மோதி 

தார் சாலையில் 

விழுந்தது 


உச்சுக் கொட்டி 

கடந்தாரே தவிர 

வரவில்லை ஒருவரும் 


வியர்க்காமல் விளையாடிக்கொண்டிருந்த 

சிறுவன் 

சென்று 

அழைத்து வந்தான் 

அப்பனை 


ஓரந் தள்ளி 

மண் அள்ளி 

போட வழியின்றி 


தார் ஊத்தி 

தகனம் செய்யப்பட்ட 

பறவை 


சாமிகிட்ட 

போகுமானு 

கேட்ட பையனுக்கு 

பதில் சொல்ல 

வார்தை இன்றி 


வந்த வழி 

திரும்புகையில் 

தார் நெடி 

வீசியது 

தெருவெங்கும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக