வாகனங்களுக்கு வளைந்து
கொடுக்கும் சாலையில்
வரவேற்க வழியெங்கும்
மரமில்லையென்று
மனமுடைந்த
பறவையொன்று
மின்கம்பி மோதி
தார் சாலையில்
விழுந்தது
உச்சுக் கொட்டி
கடந்தாரே தவிர
வரவில்லை ஒருவரும்
வியர்க்காமல் விளையாடிக்கொண்டிருந்த
சிறுவன்
சென்று
அழைத்து வந்தான்
அப்பனை
ஓரந் தள்ளி
மண் அள்ளி
போட வழியின்றி
தார் ஊத்தி
தகனம் செய்யப்பட்ட
பறவை
சாமிகிட்ட
போகுமானு
கேட்ட பையனுக்கு
பதில் சொல்ல
வார்தை இன்றி
வந்த வழி
திரும்புகையில்
தார் நெடி
வீசியது
தெருவெங்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக