உப்பு நிறைந்த நீர்
ஆவியாகி மேகம் சேர்ந்து
காற்றடித்து கனிந்த போது
உதிர்த்ததும்
இனித்தது
எப்பொழுது
கவலைகள் நிறைந்த நான்
கண் பார்த்து
மனம் பேசி
கை கோர்த்துப் பழகி
உன்னுடன் சேர்ந்த போது
இன்பங்களை
பகிர்ந்தது
எப்பொழுது
நடந்தது
நொடியில் மாற்றமா ?
மாற்றத்தின் நொடியா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக