உழவு செய்த பின்
நல்ல மழை பெய்து
விதைக்க காத்திருக்கும்
நன்னிலம் போலிருந்த
மனது
தூங்கி விழிக்கையில்
விஸ்தாரமான மரமொன்று
வளர்ந்துவிட
அதன் கிளைகளை
அனுமானிக்கிறேன்
பாலை
சுவைக்கிறேன்
இலையை
முகர்கிறேன்
விழுதுகளை
வியக்கிறேன்
பழங்களை
பறிக்கிறேன்
வீசும் காற்றில்
அசையும் மரத்தில்
லயிக்கிறேன்
இம்மரம்
பிடித்திருக்கிறதோவென
எண்ணுகையில்
எவர் விதைத்த
வித்து
இது
எமக்கு தேவையா
இது
என்னும் கேள்வி
மேலெழும்ப
கிளைகளை
வெட்டி வீசுகிறேன்
வளர்கிறது விநாடியில்
வேறு இலைகளை
இணைக்க
கிழித்து வளர்கிறது
அடியோடு
இடமாற்ற முயற்சிக்க
இயைந்து கொடுக்கவில்லை
வேரோடு பிடுங்க
பிரயத்தப்பட்டு
பயனில்லை
கவளீகரிக்க
முயன்று
களைத்தப் போக
காரணம்
யவராயிருக்கும்
என
யூகித்து
விதைத்தவனை
எதிர்த்து
வளர மறுக்கும்
வழிவகை
கூறி முடித்து
களைந்த பின்
இருந்தாலும்
வளர்த்திருக்கலாம்
என்று சொல்லி
சென்றான்
திரும்பி நின்று
புண் முறுவலோடு
செல்லுகையில்
வேறொரு
சிவப்பு ஆலமரம்
வியாபிக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக