மனமொரு
வார்த்தை நிரம்பிய
வற்றா
குளம் போன்றது
தீவிர பிரச்னையின்
தீர்வு காணும்
பொருட்டு
தூர நின்று
நிதானத்தின் தூண்டிற்கொண்டு
வார்த்தைகளை தேர்ந்தெடுத்து
வரிகளுக்கு உருக்கொடுத்து
வர்ணனை செய்வோரே
இரை பிடிக்கலாம்
ஆத்திர அலையில்
அவசரத்தின் அருகினின்று
வந்ததை எல்லாம்
வாரி எடுத்துக்
கொட்டுவது
அவரையே கடிக்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக