எவ்வொரு புத்தகமும்
வாசிக்குமுன்
எடையற்ற
வெள்ளைத்தாளில் கிறுக்கப்பட்ட
கருப்புக் கோடுகளாகவே
வெளிப்படும்
அதுபோற்
எந்தவொரு பொருளும்
கரையவோ அல்ல
உருகவோ தொடங்கினால்
எடை குறையும்
என்பதும் விதி
ஆனால்
ஒரு சிறந்த
புத்தகம் மட்டுமே
பக்கங்களை
திருப்ப திருப்ப
எடையற்ற
அவையனைத்தும்
வலிய விதியறுத்து
ஓர் உலகத்தோடு ஒத்த
கணத்தைக் ஒளித்துக்
கொண்டுள்ளது
புலப்படும்
வாசித்துணர்ந்தோர்க்கு
மட்டும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக