இறந்தவர்களின் இரவுகளை
இரவல் கொடுக்கும் தொழில்
யாருக்கு ?
அந்த இரவுகள்
குட்டி போடும்
கனவுகளை சுமக்க
நான் யார் ?
இலக்கில்லா எனக்கு
இரவில் தெரியும்
இந்த பாதை
ஏற்புடையதா ?
இருப்பினும் எழுந்து நடந்து
இலக்கையடைந்த பின்
நட்சத்திர வாசலில்
நாற்காலி போட்டு
வாழ்க்கை
கேட்ட கேள்வி ?
இலக்கின் நோக்கம்
என்ன ?
உண்மையறியாது
ஊமையாகி
உள்ளேயும்
செல்லமுடியாமல்
இரவல் வாங்கியது
எனக்கூறி இனி
திரும்பியும் செல்ல
முடியாமல்
கடைசி நிறுத்தத்தில்
நின்று கொண்டிருக்கிறேன்