செவ்வாய், 31 மே, 2022

அவளில்லை


தூங்கும் விழி 

தாங்கும் முகம் 

பார்த்து தொண்டைதனை 

யடைக்கும் துக்கம் 

திக்கும் துயர 

நிலை 


கை  பொத்தி 

வாய் மூடியும் 

கண்ணீர் இமையணை 

தாண்டி கால்களில் 

பட்ட சூடுணர்ந்து 


கரங்  கொண்டு 

கண்  தோய்த்து 

அரை தூக்கம் 

கலைந்து அடுப்படி 

தேடுமுன்னிடம் 


அம்மா ?


அவளில்லை நானென்று 

எவ்வாறுரைப்பேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக