சொல்லின் செயல்முன்
சொல் வந்து
பல்பட்ட நா
பதம் பார்த்தது
நெஞ்சை
அன்பைச் சொரியும்
அதே கண்கள்
அவள் சொல்கேட்டு
அனல் கொண்டு
தீக்கங்கானது
கேட்ட கேள்விகளுக்கு
பதிலற்று
தலை கொணர்ந்த
பிராணி போல்
யாக்கையது யடித்தது
விட்ட பதில்கள் யாவும்
விடையளிக்க இயலாத
மற்றுமொரு வினாவோடு
விரைந்து வந்து
கோபத்துக்கு
வேகமூட்டியது
உள்ளூர ரத்தமெல்லாம்
உச்சந்தலையேறி
உரக்க கத்த
யோசித்து
தன் தவறின்
நீட்சியான
அச்சொல்லை
த(க)ண்ணீரில்
கரைக்க
முற்படுகிறேன்
ஏனெனில்
வேதனைகளின்
உச்சமாயினும்
தேவதைகளில்
மிச்சமுமவளே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக