வார்குழலது வாஞ்சையோடு
கன்னம் தீண்டும்பொழுது
மெல்லச் சிணுங்க
மேலுதடு சுருங்க
விழுந்த பள்ளமதில்
விரலது கடந்து
செவியோரம் சேர்த்து
மறைத்த பின்
நொடியது பாதியில்
இடப்புறம் நோக்கி
வலக்கண் ஏதும்
வாள் சுழற்றுதோ
என்றாய்ந்து நுகர்வோர்
யாருமில்லா என்றுணர்ந்து
கண்ணோரம் சிறு
கவிதைபாடி
கடந்து சென்றதும்
எம்மனக்கண்
கண்ட இவ்விளக்கத்திற்கு
அப்பொருள் தானே ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக