திங்கள், 9 மே, 2022

நொடிப் பொருள்

 


வார்குழலது வாஞ்சையோடு

 கன்னம் தீண்டும்பொழுது

மெல்லச் சிணுங்க 

மேலுதடு சுருங்க 

விழுந்த பள்ளமதில்

 விரலது கடந்து

 செவியோரம் சேர்த்து

 மறைத்த பின் 

நொடியது பாதியில்

இடப்புறம் நோக்கி 

வலக்கண் ஏதும் 

வாள் சுழற்றுதோ 

என்றாய்ந்து நுகர்வோர் 

யாருமில்லா என்றுணர்ந்து

கண்ணோரம் சிறு 

கவிதைபாடி 

கடந்து சென்றதும் 

எம்மனக்கண்

 கண்ட இவ்விளக்கத்திற்கு 

அப்பொருள் தானே ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக