உதட்டோரம் கசிந்த
சிரிப்பு நழுவி
கன்னக் குளத்தில்
விழுந்ததும்
சுட்டு விரல்
கொண்டு கண்ணடி
கறுமைத் தொட்டு
கலந்ததில்
பேனா முனைத்
தொட்டெழுதிய
எழுத்துக்களுக்கும்
கிறுக்குப் பிடித்து
இடமாறி இடறி
சொல்லும் பொருளும்
அவளதரமும் அதன்
நகையுமாகி
நாம சங்கீர்த்தனமாகியது
அக்கருமை
கனந்தாங்காது
காகிதத்துக்கும்
மயக்கம் வந்து
கன மேசையடியில்
கிடத்திய
பின்
தரணி
தலை
சுற்றியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக