ஈரிரெண்டு மணி
நேரங் கழித்து
ஓரிரு வார்த்தைகளை
மட்டுமே கொட்ட
முடிந்தது
முதல் சந்திப்பில்..
முன்னோட்டம் பார்த்த
வார்த்தைகள் யாவும்
தொண்டைக்குள் வெட்கி
சிக்கியதில் வாயிற்
வாசலில்
வந்த முதல்
வார்த்தை 'வாங்க'
தொண்டையினுள் சிக்கிய
வார்த்தைகளை சுடு
தேநீர்க் கொண்டு
சுட்டு விட்டு
சக்தி முழுதும்
பிரயோகித்து
தைரிய மனைத்தும்
கிரகித்து சொல்ல
வந்த வேளையில்
நீ சொன்ன
வார்த்தையின்
எதிரொலியில்
நான் சொன்ன
இரண்டாம் வார்த்தை
'போகலாம்'
சொன்ன
இரு வார்த்தையும்
உன்னோடு சேர்த்தால்
என்னோடு வருவாயா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக