புதன், 18 மே, 2022

வாரா நாட்கள்

 


பள்ளி வருமுன் 

பஞ்சரானது 

புது சைக்கிள் 


வகுப்பு வாசலில் 

தடுக்கி 

விழுந்தேன் 


வந்த பின் 

முதல் பெஞ்சில் 

அமர்த்தப்பட்டேன் 


கரும்பலகை 

அழிக்க 

கட்டளையிடப்பட்டேன் 


அதீத வெயிலால் 

அன்று மதிய 

சோறும் கெட்டது 


பச்சத் தண்ணீரும் 

சூடாக 

உள்ளிறங்கியது 


பசிதூக்கத்தில் 

வீழ்ந்ததால் 

உரைநடை 

உரக்கப் படிக்க

உத்தரவிடப்பட்டேன் 


கடைசி 

பீ.டீ பீரியடும்  

கணக்கு வாத்தியருகே

கடனளிக்கப்பட்டது


இவ்வனைத்து 

துர் சம்பவங்களின் 

துயர காரணம் 


வருகைப் பதிவேட்டில் 

அவள் 

வாரா நாட்களே !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக