வியாழன், 5 மே, 2022

மழலைக் கட்டளை

 

காலையில் கதிரவனைப் பார்த்து 
கண்டித்து கொண்டிருந்தாள்..

ஏன் என்று கேட்டேன் ?

இரவில் யாருமில்லை 
என்பதை யறிந்து 
நட்சத்திரங்களை திருடிச் 
சென்று விட்டது 
இந்த சூரியன்
என்றாள்
கோபமாக !

அதற்கு தக்க தண்டனை 
 வழங்க வேண்டும் 
மீண்டும் செய்யாதிருக்க..

என்ன தண்டனை ?

உச்சிப் பொழுதில் 
கருமேகங்கள் 
இச்சூரியனை சிறை பிடிக்க
ஆணையிடுகிறேன் 
என்றாள் 
அரசி போல்..

அதிர்ந்து சிரித்துவிட்டு 
அலுவலகத்துக்கு சென்று 
அரை நாள் 
ஆனா பின்பு ,
அவள் சொன்னதை 
உணர்ந்த மேகங்கள் 
போல் 
சூரியனை மறைத்தன் 
மாயம் என்னவோ!

பெரியவர்களாகி 
தள்ளிகொண்டே போகின்றோம் 
இளந் தளிர்களிடமிருந்தும் 
இயற்கைடயிமிருந்தும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக