காற்றோடு பேசி சிரித்துக்
கொண்டிருந்த இலைகள்
கட்டிடங்களுக்கு நடுவே
கேட்பாரற்று கிடந்து
மன உளைச்சளுக்களானது
ஆற்றினருகை அரிமருகன்
அமர்ந்து விளையாடி
அருள் தந்தது போய்
ரோட்டோரம்
புகைகளையும் புழுதிகளையும்
உண்டு புற்று நோய்
வந்திருந்தது
குழந்தைகள் விழுதுகளில்
தொங்கி விளையாடி
பின் அயர்ந்தமர்ந்து
கட்டிப்பிடித்து விளையாடி
ஆறுதல் சொல்ல கூட
ஆளற்ற ஆலமரம்
சொந்த பந்தங்களான
குருவிகளின்
கூடுகளற்ற கிளைகளால்
அனாதையாக்கப்பட்ட
ஆலமரம்
சுட்ட பழம்
சுடாத பழம்
என்றில்லாமல் அனைத்தும்
சிமெண்ட் தரையில்
வீழ்ந்து நசுக்கப்பட்டு
நன்மையற்றுப் போனதையெண்ணி
நாளுக்கு நாள்
மெலிந்து போனது
வெட்டும் மின்னலைப்
பிடித்து
தானே
தற்கொலை செய்து
கொண்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக