சனி, 23 ஜூலை, 2022

உண்மை = உவமை

 


'அழகை இருக்கிறாய்'

என்ற உண்மையை 

அகம் நிறைய 

உரைத்த பின் 


அவளோ 

உன் வார்த்தைகள் 

யாவும் 

உரித்த கோழி 

போல ஒன்றும் 

இல்லாமல் 

இருக்கிறது என்றாள் 


பின் சற்றே

யோசித்து 

இவ்வாறாக 

கூறினேன் 


'தேன் எடுக்க வந்த நான் வண்டு 

திகைத்து நின்றேன் உன்னைக் கண்டு 

சீ! என்று உன் கால்கொம்பால் தீண்டு 

சிறப்பான மோட்சம் எமக்கு உண்டு'


இருக்கின்ற உண்மையை 

கூட 

இல்லாத உவமைக் 

கொண்டு கூறினாலே 

கேட்க எவருக்கும் 

விருப்பம் 


- இயற்கை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக