வெள்ளி, 15 ஜூலை, 2022

பெண் பார்க்கும் படலம் - 1

 



பெண்கள் கொஞ்சுவதினாலே 

நாய்கள் குட்டிகளாகவே

இருக்கின்றன போலும் 

ஆனால் 

ஆண் வாசமடித்தால் 

மட்டும் அதிரக் 

குரைக்கும் என்றெண்ணி 

வாசல் வந்ததும் 


நேற்றிரவு வைத்த 

மருதாணிச் சாயம் 

பரந்த ஒருகையும் 

இந்த பகல் 

முழங்கை வரை சிதறிய 

கடலை மாவாகிய 

மறுகையும் ஒருசேர 

"உள்ள வாங்க"

என்று சொல்லி 

நாயை  மட்டும் 

விரட்டினார் அந்தம்மா 


"உட்காருங்க" யென்று 

சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே  

ஓரறைக்குள் சென்று 

துல்லியமாய் கேட்கா 

தொலைதூரம் மொலிக்கும்

பாடல் போல 

ஏதோ கத்திவிட்டு 

மறுபடி 

சிரித்துக் கொண்டே 

அடுக்களைக்குள் 

சென்று விட்டார் 


கரை வேட்டி 

கலைந்த மடிப்பை 

நேர்படுத்திக் கொண்டே

நிர்மலா பெரியசாமியின்

நெருங்கிய உறவினர் போல் 

கணத்தக் குரலில் 

வணக்கஞ் சொல்லி 

வரவேற்றார் அவர் 


எவ்வளவு செலவானாலும் 

பரவாயில்லை டாக்டர் 

என்பதுபோல் 

கல்யாணத்திற்குப் பிறகு 

எல்லாமே எம்பொண்ணுக்கு 

தான் என்றுரைத்து 

அவள் பேருரைத்தார் 


அண்ணன் அக்காள் 

தம்பி தங்கையற்ற 

தனி மலர் போலும் 

வீடெங்கும்

அவள் முகம்  

புகைப்படங்களாய் 

பூத்திருந்தத்து 


பெண்பார்க்க என்னோடு 

சேர்த்து பதினேழு பேர் 

அங்கு அவளையுஞ்

சேர்த்தே ஐந்துபேர் தான் 

இருப்பினும் 

பெண்ணுடன் பேச 

வேண்டுமென்று பெற்றோரைப் 

பார்க்க பெருமிதத்தோடு 

தலையாட்டினர் 


காமஞ் சொட்ட 

ஒரு குறள் 

காதல் கொட்ட 

பாரதி பாடல் 

எதை முதலில் 

சொல்லவென உள்ளிருப்பு 

போராட்டத்தில் 

கேள்விக்கணைகளை 

பெண்ணே தொடுத்தால் 

இப்படியாக 


தனிக்குடும்பம் 

எப்போ போவோம் ?


2 கருத்துகள்: