நீண்ட இரவின்
நடு சாமத்தில்
வந்தாலும்
காலடி சத்தங்கேட்டு
கண் விழிப்பாள்
வேலையிலிருந்து
சோர்ந்து வருகையில்
வேடிக்கை பல
காட்டி
சிரிக்க வைப்பாள்
எப்போது
சாப்பிட்டாலும்
எனக்குமொறு
உருண்டை
ஊட்டி விடுவாள்
சேர்ந்து படுக்கையில்
சோர்ந்து போய்
சீக்கிரம் தூங்கிடுவாள்
எனக்கு முன்
இடையிடையே எழுந்து
என் இருப்பை
உறுதிப்படுத்திக்
கொண்டு மீண்டும்
உறங்கிடுவாள்
இப்படியாக
பெண் பிள்ளைகள்
வளரும் போதே
தாயாகாவே
வளருகின்றன
அப்பாக்களுக்கு!!
- இயற்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக