சனி, 23 ஜூலை, 2022

தந்தை ஈன்ற தாய்

 


நீண்ட இரவின் 

நடு சாமத்தில் 

வந்தாலும் 

காலடி சத்தங்கேட்டு 

கண் விழிப்பாள் 


வேலையிலிருந்து 

சோர்ந்து வருகையில் 

வேடிக்கை பல 

காட்டி 

சிரிக்க வைப்பாள் 


எப்போது 

சாப்பிட்டாலும் 

எனக்குமொறு  

உருண்டை

ஊட்டி விடுவாள் 


சேர்ந்து படுக்கையில் 

சோர்ந்து போய் 

சீக்கிரம் தூங்கிடுவாள் 

எனக்கு முன் 


இடையிடையே எழுந்து 

என் இருப்பை 

உறுதிப்படுத்திக் 

கொண்டு மீண்டும் 

உறங்கிடுவாள் 

 

இப்படியாக 

பெண் பிள்ளைகள் 

வளரும் போதே 

தாயாகாவே

வளருகின்றன 

அப்பாக்களுக்கு!!


- இயற்கை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக