கூந்தல் மல்லி
குறுக்குவழி போக
குறு குறு
பார்வை பின்
தொடர்ந்து செல்ல
திரும்பி சிரித்த
மல்லியால்
சற்றே மயங்கிய
பார்வை
பின் தூரத்தை
துளைத்தது
வாடை மட்டும்
வீசும் மல்லி
வந்த வழியில்
காணாததையெண்ணி
ஆந்தையாய்
சுற்றிய பார்வை
அமைதியிழந்து
அலைய அந்நேரம்
கரவொலி கேட்டு
காடே அதிர
பதறிய பார்வை
பாதையை தேட
பகலின் எதிரி
பாம்பாய்
காட்டை சூழ
பாதையெல்லாம்
நெளிந்தது
மங்கிய பார்வை
மரவோரம்
பயந்து சரிய
பார்வைக்கு
நேராய்
தொங்கியது
கூந்தலும்
மல்லியும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக