செவ்வாய், 20 டிசம்பர், 2022

மாய மல்லி


 

கூந்தல் மல்லி 

குறுக்குவழி போக 


குறு குறு 

பார்வை பின் 

தொடர்ந்து செல்ல 


திரும்பி சிரித்த 

மல்லியால் 

சற்றே மயங்கிய 

பார்வை 


பின் தூரத்தை 

துளைத்தது


வாடை மட்டும் 

வீசும் மல்லி 

வந்த வழியில் 

காணாததையெண்ணி 


ஆந்தையாய் 

சுற்றிய பார்வை 

அமைதியிழந்து 

அலைய அந்நேரம் 


கரவொலி கேட்டு 

காடே அதிர 

பதறிய பார்வை 

பாதையை தேட 


பகலின் எதிரி 

பாம்பாய் 

காட்டை சூழ 

பாதையெல்லாம் 

நெளிந்தது 


மங்கிய பார்வை 

மரவோரம் 

பயந்து சரிய 


பார்வைக்கு 

நேராய் 

தொங்கியது 

கூந்தலும் 

மல்லியும்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக