வியாழன், 29 டிசம்பர், 2022

ஒரு பாடல் = ஓராயிரம் நினைவுகள்

 


காலையில் 

காதினுள் நுழைந்த 

ஒரு பாடல் 


கூண்டுக்கிளி 

சிறகடித்து பறக்க

எம்பி எம்பித் 

துடிப்பதை போல் 

மனதினில் அலைப் 

பட்டுக்கொண்டேயிருந்தது 


பின் சிறிது நேரத்தில் 

தேநீர் உதவியோடு 

தனிமை கொஞ்சம் 

கிடைக்க அப்பாடல் 

மீண்டும் துடிக்க 


அதனூடே 

மிதந்து கொண்டு 

பயணிக்கையில் 

தூர நீர்ப்பரப்பு 

சென்று 


ராகங்களை 

தூண்டிலாகயிட்டு 

நினைவுகளில் துவள 

தூரத்தில் பாடல் மட்டும் 

ஒலித்திக்கொண்டிருந்தது 


அவ்விசையோடு 

கோர்க்கப்பட்ட நினைவுகளில் 

இப்பொழுதும் 

சில கீறல்களிருக்க 


முள்ளின் முனையை 

தொட்டுணர்ந்ததுபோல் 

மேலை பட்டதும் 

மீண்டும் 

ஆழஞ்சென்றது 


மறு முறை 

வரும்போது 

ஆரத்தழுவி விடுவேன் 

யென்ற முனைப்புடன் 


அதர விளிம்பில்

சிறு புன்னகையை 

எடுத்துக் கொண்டு 

கரையை யடைந்ததும் 


நீரின் ஆழத்தில் 

யாரும் கண்டிரா 

திரியும் ஏதோவோர்  

உயிரினத்தின் 

காயங்களுக்கு 

மருந்திட்ட திருப்தி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக