முற்றும் கற்றவனென
எவனுமில்லை
ஏனெனில்
கற்பதருக்கென்று
ஏதாவதொன்று
இருந்து கொண்டே
தானிருக்கும்
அதுபோற் என்னை
முழுதும் ரசித்தவர்
என்று எவருமில்லை
ஏனெனில்
ஏதோவொரு இடத்தில்
எங்கோவொரு மூலையில்
நீ ரசிப்பதற்கென்றே
பார்வைகளையே
கண்டிராத பகுதிகள்
ஏராளமென்னில்
இப்படிக்கு
'இயற்கை' - யான
நான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக