மலரும் ஓர்
பூவைக் கண்டு
மற்றொரு பூ
என்றுமே
பொறாமை
கொள்வதேயில்லை
மாறாக
மலரு மழகிய
நிகழ்வைக் கண்டு
மகிழ்ச்சியுறுமை யன்றி
மலரா தன்னோடு
ஒப்பிட்டு
அந்நிகழ்வை
கலங்கப் படுத்தாது
தனித்துவமான
தன்னுடைய
மணம் விட்டு
மலருவதற்காக
தனக்கான நேரம்
வரும் வரை
பொறுமை காத்துக்
கொண்டிருக்கிறது
இப்படியாகத் தானிருந்திருக்க
வேண்டும்
மனிதமும்
ஆனால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக