சனி, 24 டிசம்பர், 2022

மலரும் மனிதமும்



 மலரும் ஓர் 

பூவைக் கண்டு 

மற்றொரு பூ 

என்றுமே 

பொறாமை 

கொள்வதேயில்லை 


மாறாக

மலரு மழகிய 

நிகழ்வைக் கண்டு 

மகிழ்ச்சியுறுமை யன்றி 


மலரா தன்னோடு 

ஒப்பிட்டு 

அந்நிகழ்வை 

கலங்கப் படுத்தாது 


தனித்துவமான 

தன்னுடைய 

மணம் விட்டு 

மலருவதற்காக  


தனக்கான நேரம் 

வரும் வரை 

பொறுமை காத்துக் 

கொண்டிருக்கிறது 


இப்படியாகத் தானிருந்திருக்க 

வேண்டும் 

மனிதமும் 

ஆனால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக