நெல்லுக்கு நாற்று விட்டு
நடவு செய்து
அறுவடைக்கிடைப்பட்ட
காலத்தில்
வருடம் மாறிவிடுகிறது
ஆனால்
அதற்கு தேவையானது
என்னவோ வளர்வதற்கான
நாட்களும், நன்னீரோடு
நம்பிக்கையான உழைப்பும்
போதுமானது
வருடத்தின் எண் அல்ல
அதுபோல்
நாம் செய்யும்
நற்செயல்கள்தான்
வருடங்கடந்தும்
பேசும்
எந்த நாளில்
தொடங்கினோம்
என்பதையல்ல
ஆதலால்
நற்செயலை தொடங்க
எனக்காக
காத்திருக்க வேண்டாம்
-இப்படிக்கு
புத்தாண்டின் மற்றொரு எண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக