தென்றலுக்கேற்ப
இலையும் கிளையும்
இசைந்து
அசையும் நிழலில்
தாய் போலத்
தாலாட்டி தூங்கவைத்த
மரத்தினை கொன்று
வேரோடு சாய்த்து
மலையளவு வீடெழுப்பி
அசையா நிழலில்
நிம்மதியாய் உறங்க வெண்ணி
தாய் கொண்ட
கோபத்தின் அழல்
தாங்க
முடியாமற் தவித்து
வெக்கிப் புழுக்கந் தாங்காது
புறத்தை யோடி
புரியாமற்
பார்க்கையில்
மரத்தின் உயிர்ப்பான
நிழலை விட
சுவரின் உயிரற்ற
நிழல் எவ்வகைளும்
ஏற்புடையதல்ல
என்றுணரும் தருணம்
மரத்தின் பிடியில்
வீடே சூன்யமாய்
மாறியிருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக