அன்பென்பது அனுதினமும்
வீசும் கடலலை போல
அதை
பெரிதாக பொருட்படுத்துவதேயில்லை
ஆனால்
எப்பொழுது கவனத்திற்கும்
எதிர்பார்ப்புகளுக்கும்
உள்ளாக்கப்படுகிறதோ
அப்பொழுது
நடு
இரவினில் வந்து
கடல் அலைகள்
சுடவில்லை எனவும்
நன்
பகலினில் வந்து
குளிரவில்லை எனவும்
சொல்வது போலாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக