ஞாயிறு, 21 மே, 2023

அன்பெனும் குற்றம்

அன்பென்பது அனுதினமும் 

வீசும் கடலலை போல 

அதை 

பெரிதாக பொருட்படுத்துவதேயில்லை 


ஆனால் 

எப்பொழுது கவனத்திற்கும் 

எதிர்பார்ப்புகளுக்கும் 

உள்ளாக்கப்படுகிறதோ 


அப்பொழுது 

நடு 

இரவினில் வந்து 

கடல் அலைகள் 

சுடவில்லை எனவும் 


நன் 

பகலினில் வந்து 

குளிரவில்லை எனவும் 

சொல்வது போலாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக