எப்பொழுதும்
நீ பேசும்
அன்பான
மௌனங்களை எல்லாம்
ஒரு கிணற்றில் கொட்டி
நிரப்பி விட்டாலென்ன?
ஏனெனில்
எப்பொழுதாவது
நீ பேசா
சுடு சொற்களை
அம்மௌனக் கிணற்றிலிருந்து
வாளி இரைத்து
தனித்துக் கொள்வேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக