வெள்ளி, 6 மே, 2022

பிம்பத் தேக்கம்

 

வெயில் மழை 

பாராது 

ரோட்டோரம் 


குடைப் பிடித்துக் 

கொண்டிருக்கும் 

மரத்தினடியில் 

உடைந்த 

நிழல்களோடு 

உரையாடி

உள்மனதை 

கண்ணீரிலிருந்து 

வெளிக்காற்றில் 

உலர்த்தும் 

யாரோ ஒருவனில் 

அவன் நான் 

என் பிம்பத்தைக் 

கண்ட பின் 

இரவி-யின் இரு 

அம்புகள் 

தீண்டிச்செல்ல 

கடக்க எத்தனித்து 

தேங்கி நிற்கிறேன் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக