எப்பொழுதும்
நீ பேசும்
அன்பான
மௌனங்களை எல்லாம்
ஒரு கிணற்றில் கொட்டி
நிரப்பி விட்டாலென்ன?
ஏனெனில்
எப்பொழுதாவது
நீ பேசா
சுடு சொற்களை
அம்மௌனக் கிணற்றிலிருந்து
வாளி இரைத்து
தனித்துக் கொள்வேன்
எப்பொழுதும்
நீ பேசும்
அன்பான
மௌனங்களை எல்லாம்
ஒரு கிணற்றில் கொட்டி
நிரப்பி விட்டாலென்ன?
ஏனெனில்
எப்பொழுதாவது
நீ பேசா
சுடு சொற்களை
அம்மௌனக் கிணற்றிலிருந்து
வாளி இரைத்து
தனித்துக் கொள்வேன்
அன்பென்பது அனுதினமும்
வீசும் கடலலை போல
அதை
பெரிதாக பொருட்படுத்துவதேயில்லை
ஆனால்
எப்பொழுது கவனத்திற்கும்
எதிர்பார்ப்புகளுக்கும்
உள்ளாக்கப்படுகிறதோ
அப்பொழுது
நடு
இரவினில் வந்து
கடல் அலைகள்
சுடவில்லை எனவும்
நன்
பகலினில் வந்து
குளிரவில்லை எனவும்
சொல்வது போலாகும்
தென்றலுக்கேற்ப
இலையும் கிளையும்
இசைந்து
அசையும் நிழலில்
தாய் போலத்
தாலாட்டி தூங்கவைத்த
மரத்தினை கொன்று
வேரோடு சாய்த்து
மலையளவு வீடெழுப்பி
அசையா நிழலில்
நிம்மதியாய் உறங்க வெண்ணி
தாய் கொண்ட
கோபத்தின் அழல்
தாங்க
முடியாமற் தவித்து
வெக்கிப் புழுக்கந் தாங்காது
புறத்தை யோடி
புரியாமற்
பார்க்கையில்
மரத்தின் உயிர்ப்பான
நிழலை விட
சுவரின் உயிரற்ற
நிழல் எவ்வகைளும்
ஏற்புடையதல்ல
என்றுணரும் தருணம்
மரத்தின் பிடியில்
வீடே சூன்யமாய்
மாறியிருக்கும்