உச்சி வெயிலில்
ஓட்டுப் பிளவில்
கதிர் வாளை
பாய்ச்சினான்
நீண்ட நேர்த்தியான
செம்பழுப்பில்
பழுக்கக் காய்ச்சிய
வாள் அது!
நல் வேளையாக
நகர்த்திவிட்டேன்
குழந்தையை
இல்லையேல்
நெஞ்சினில் நேரே
இறங்கியிருக்கும்
கடிந்து கொண்டேன்
கதிரவனை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக