அசையா ஆலமரத்திலிருந்து
முதிர்ந்த இலையொன்று
உதிர்ந்து
மரத்துக்கடியில் இருக்கும்
குளத்தின் மரத்தில்
கலந்து
குளத்தோடு சேர்த்து
மரத்தையும்
அசைத்ததாய்
நிம்மதி யடைந்து
நிறைவற்ற நித்திரைக்கு
நீந்திச்
செல்கிறது
ஆறுதலுக்கு கூட
அசையவில்லை
அசையா ஆலமரம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக