சனி, 30 செப்டம்பர், 2023

மர வீடு

 நூறாண்டுக்கும் பழமையான 

மரங்களை 

உயிரோடு அறுத்தெறிந்து 

சாலை விரிவாக்கம் 

என்னும் பெயரில் 

சாவை நமக்கு 

நாமே 

வரவழைத்துக் கொண்டிருக்கிறோம் 


பல நாளாய் 

வீடென கருதி 

சென்று வரும்

பெயர் தெரியா பறவைக்கு 

இன்று யார் சொல்வது 

வீடு வெட்டி எறியபட்டதென்று 


செல்ல இடமறியாது

சூடு தாளாமல் 

பித்தம் கலங்கி 

கானல் நீரை 

கொத்தி குடித்து

இறக்கிறது 


அதுபோற் 

நிழலுக்கு இடமின்றி 

நா  வறண்டு

நடை தளர்ந்து

மூச்சு விட முடியாமல் 

முயங்கி மறைவோம் 


இயற்கை என்பது 

இயல்பாகவே நமக்கு 

கை கொடுக்கிறது 

எல்லா வகையிலும் 

நாம்தான் 

அதனை ஒவ்வொருமுறையும் 

வெட்டிக் கொண்டே யிருக்கிறோம்


மரமும் அதன் 

பிள்ளைகளான  பறவைகளின் 

சாபமும் 

கட்டாயம் 

மனிதரை கொல்லும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக