மேகங்கள் முத்தமிடும்
அந்தரங்கத்தை
வெளிச்சமிட்டு காட்டும்
மின்னலே
உமக்கு
வெட்கமாகவேமில்லையா ?
மேகங்கள் முத்தமிடும்
அந்தரங்கத்தை
வெளிச்சமிட்டு காட்டும்
மின்னலே
உமக்கு
வெட்கமாகவேமில்லையா ?
எப்பொழுதும்
நீ பேசும்
அன்பான
மௌனங்களை எல்லாம்
ஒரு கிணற்றில் கொட்டி
நிரப்பி விட்டாலென்ன?
ஏனெனில்
எப்பொழுதாவது
நீ பேசா
சுடு சொற்களை
அம்மௌனக் கிணற்றிலிருந்து
வாளி இரைத்து
தனித்துக் கொள்வேன்
அன்பென்பது அனுதினமும்
வீசும் கடலலை போல
அதை
பெரிதாக பொருட்படுத்துவதேயில்லை
ஆனால்
எப்பொழுது கவனத்திற்கும்
எதிர்பார்ப்புகளுக்கும்
உள்ளாக்கப்படுகிறதோ
அப்பொழுது
நடு
இரவினில் வந்து
கடல் அலைகள்
சுடவில்லை எனவும்
நன்
பகலினில் வந்து
குளிரவில்லை எனவும்
சொல்வது போலாகும்