உன்
கவலைகளை
எல்லாம்
அடகு வைத்து
சந்தோசத்தை
வட்டிக்கு
விடும்
மார்வாடி
மாந்தர்களை
மறவாது
எப்படியேனும்
உறவில்
ஒன்றிருப்பது
மறைவுக்கான
மாலைகளை
தள்ளிப்போடும்
தாற்பரியம்
உன்
கவலைகளை
எல்லாம்
அடகு வைத்து
சந்தோசத்தை
வட்டிக்கு
விடும்
மார்வாடி
மாந்தர்களை
மறவாது
எப்படியேனும்
உறவில்
ஒன்றிருப்பது
மறைவுக்கான
மாலைகளை
தள்ளிப்போடும்
தாற்பரியம்
உழவு செய்த பின்
நல்ல மழை பெய்து
விதைக்க காத்திருக்கும்
நன்னிலம் போலிருந்த
மனது
தூங்கி விழிக்கையில்
விஸ்தாரமான மரமொன்று
வளர்ந்துவிட
அதன் கிளைகளை
அனுமானிக்கிறேன்
பாலை
சுவைக்கிறேன்
இலையை
முகர்கிறேன்
விழுதுகளை
வியக்கிறேன்
பழங்களை
பறிக்கிறேன்
வீசும் காற்றில்
அசையும் மரத்தில்
லயிக்கிறேன்
இம்மரம்
பிடித்திருக்கிறதோவென
எண்ணுகையில்
எவர் விதைத்த
வித்து
இது
எமக்கு தேவையா
இது
என்னும் கேள்வி
மேலெழும்ப
கிளைகளை
வெட்டி வீசுகிறேன்
வளர்கிறது விநாடியில்
வேறு இலைகளை
இணைக்க
கிழித்து வளர்கிறது
அடியோடு
இடமாற்ற முயற்சிக்க
இயைந்து கொடுக்கவில்லை
வேரோடு பிடுங்க
பிரயத்தப்பட்டு
பயனில்லை
கவளீகரிக்க
முயன்று
களைத்தப் போக
காரணம்
யவராயிருக்கும்
என
யூகித்து
விதைத்தவனை
எதிர்த்து
வளர மறுக்கும்
வழிவகை
கூறி முடித்து
களைந்த பின்
இருந்தாலும்
வளர்த்திருக்கலாம்
என்று சொல்லி
சென்றான்
திரும்பி நின்று
புண் முறுவலோடு
செல்லுகையில்
வேறொரு
சிவப்பு ஆலமரம்
வியாபிக்கிறது
பெற்றோரோடு பழைய கதையும்
மனைவியோடு நிகழ் கதையும்
குழந்தையோடு வருங் கதையும்
பேசி வந்து
அந்நேரத்திற்கு நிகரான
செல்வமும்
அமையப் பெற்றால்
இப்பிறவியிலே
இன்பமதை
சிறிதேனும்
நுகரலாம்
ஒவ்வொரு
நடைக்கும்
மண்
அள்ளித்
தின்னும்
இந்த பெரிய
குழந்தையை
திட்டி
அதட்டத்தான்
யாருமில்லை
கடல்
சிறு காற்றுக்கும்
சீறிக் கொண்டே
இருக்கிறது
உப்பு
நிறைய
சாப்பிடும்
பெரும்
ரோசக்காரிதான்
போலும்
இந்தக் கடல்
உப்பு நிறைந்த நீர்
ஆவியாகி மேகம் சேர்ந்து
காற்றடித்து கனிந்த போது
உதிர்த்ததும்
இனித்தது
எப்பொழுது
கவலைகள் நிறைந்த நான்
கண் பார்த்து
மனம் பேசி
கை கோர்த்துப் பழகி
உன்னுடன் சேர்ந்த போது
இன்பங்களை
பகிர்ந்தது
எப்பொழுது
நடந்தது
நொடியில் மாற்றமா ?
மாற்றத்தின் நொடியா ?
வாகனங்களுக்கு வளைந்து
கொடுக்கும் சாலையில்
வரவேற்க வழியெங்கும்
மரமில்லையென்று
மனமுடைந்த
பறவையொன்று
மின்கம்பி மோதி
தார் சாலையில்
விழுந்தது
உச்சுக் கொட்டி
கடந்தாரே தவிர
வரவில்லை ஒருவரும்
வியர்க்காமல் விளையாடிக்கொண்டிருந்த
சிறுவன்
சென்று
அழைத்து வந்தான்
அப்பனை
ஓரந் தள்ளி
மண் அள்ளி
போட வழியின்றி
தார் ஊத்தி
தகனம் செய்யப்பட்ட
பறவை
சாமிகிட்ட
போகுமானு
கேட்ட பையனுக்கு
பதில் சொல்ல
வார்தை இன்றி
வந்த வழி
திரும்புகையில்
தார் நெடி
வீசியது
தெருவெங்கும்
கடவுளையும் காற்றையும்
கண்டதில்லை யவரும்
சொன்னவர் யாரோ
அறியதா நானோ
சொல்கிறேன்
பொருள் அசைவினில்
காற்றும்
நற் செயலிலும்
கடவுளும்
காணலாம்
எப்பொழுதும்